துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சரண். தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை சரண் இயக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படு தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. அந்தப் படத்தில் சிம்பு தனி ஹீரோ இல்லை.
விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மேலும் இரண்டு ஹீரோக்கள் படத்தில் உள்ளனர். ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் அதில் நடிக்க இருக்கிறார்கள். அந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் சரண் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் இப்போது சரண் பிசியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அஜித்தை வைத்து அசல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டைவிட்டார் சரண். இந்த வாய்ப்பையாவது சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சரி.