ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சரண். தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை சரண் இயக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படு தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. அந்தப் படத்தில் சிம்பு தனி ஹீரோ இல்லை.
விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மேலும் இரண்டு ஹீரோக்கள் படத்தில் உள்ளனர். ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் அதில் நடிக்க இருக்கிறார்கள். அந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் சரண் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் இப்போது சரண் பிசியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அஜித்தை வைத்து அசல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டைவிட்டார் சரண். இந்த வாய்ப்பையாவது சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சரி.