ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. இப்படம் வெற்றியடைந்து, இயக்குநரான கார்த்திக் நரேனும் பேசப்பட்டார். தற்போது கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக 'நரகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ''எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!' என்று இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.