இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு மத்திய அரசு 18 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது. அதனுடன் தமிழக அரசு 30 சதவிகிதம் கேளிக்கை விரி விதித்தது. இதனால் 48 சதவிகித வரி கட்ட வேண்டியது இருந்தது. கடுமையான போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவிகிதமாக குறைத்தது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைக்குள் அமைந்துள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படத்துக்கு வரித் தொகை நீங்கலாக 30 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். பழைய திரைப்படத்திற்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். பிற பகுதிகளில் புதிய மற்றும் பழைய திரைப்படத்திற்கு வரித்தொகை நீங்கலாக மொத்தம் 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வரி அறிவிப்பு திரையுலகில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.