ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு மத்திய அரசு 18 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது. அதனுடன் தமிழக அரசு 30 சதவிகிதம் கேளிக்கை விரி விதித்தது. இதனால் 48 சதவிகித வரி கட்ட வேண்டியது இருந்தது. கடுமையான போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவிகிதமாக குறைத்தது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைக்குள் அமைந்துள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படத்துக்கு வரித் தொகை நீங்கலாக 30 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். பழைய திரைப்படத்திற்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். பிற பகுதிகளில் புதிய மற்றும் பழைய திரைப்படத்திற்கு வரித்தொகை நீங்கலாக மொத்தம் 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வரி அறிவிப்பு திரையுலகில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.