'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில், தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார். ஒஸ்தி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். மல்லிகா தனது காதலர் சிரிலுடன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்திய மதிப்பின் படி மாதம் 4 லட்சத்து 60 ஆயிரம் வாடகை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் மல்லிகா வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், காதலர் சிரிலை தாக்கி விட்டுச் சென்றனர். இதனால் வீட்டு உரிமையாளர் உரிய பாதுகாப்பு தர தவறிவிட்டார் என்று கூறி வாடகை செலுத்தாமல் இருந்தார் மல்லிகா. வாடகை பாக்கி ரூ.64 லட்சமானது. இதனால் வீட்டு உரிமையாளர் மல்லிகா மீது கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மல்லிகா ஷெராவத், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் வாடகை செலுத்த முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர், மல்லிகா ஷெராவத் கடந்த ஆண்டு நடித்த படங்களின் பட்டியலையும், அதற்கு அவர் வாங்கி சம்பளத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கியை செலுத்தாத மல்லிகா ஷெராவத்தை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றும்படி நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டது.