ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் தனது மலேசிய கலை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு...
கேள்வி: மலேசிய கலை விழா எப்படி இருந்தது?
விஷால்: மலேசிய கலை விழா சிறப்பாக இருந்தது, ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.
கேள்வி: கலைவிழாவில் மூத்த நடிகர்கள் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..?
விஷால்: எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. இது மலேசியா வந்த அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: எஸ்.வி.சேகர் அறக்கட்டளையிலிருந்து ராஜினாமா செய்துள்ளாரே?
விஷால்: அவர் ராஜினாமா செய்ததற்கு காரணம் இருக்கலாம். ஆனால் அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.
கேள்வி: கமல்ஹாசன் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பிச்சைக்காரர்கள் என்றும், டிடிவி தினகரனை திருடன் என்றும் விமர்சித்துள்ளாரே?
விஷால்: இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி: போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பற்றி?
விஷால்: இது பண்டிகை காலம். போக்குவரத்துக்கு மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
கேள்வி: கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வர இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு யாருக்கு?
இந்த கேள்விக்கு பதில் அளிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அப்போதுள்ள சூழ்நிலையில் அதுபற்றி பரிசீலித்து முடிவெடுப்பேன்.
இவ்வாறு விஷால் பேட்டியளித்தார்.