கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகர் சங்க கட்டடத்தால் மக்களுக்கு என்ன பயன், அதை கட்டுவதற்கு நிதி திரட்ட, லட்சம், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் வசூலிப்பதை விடுத்து, கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் நடத்துகிறேன் என்ற பெயரில் பணம் வசூலிப்பது ஏன்? என மக்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில், குழப்பம் உருவாகி விட்டது. விஷாலின் சமீபத்திய செயல்பாடுகளால் நடிகர் சங்க நிர்வாகிகள், அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர். துணை தலைவர் பொன்வண்ணன், ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். பின் சங்கத்தின் நலனுக்காகவும், நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்காகவும் ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
நடிகர் சங்கத்தில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த எஸ்வி.சேகர், ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சங்க தேர்தல் முடிந்த பின், என்னை சங்க டிரஸ்டிகளில் ஒருவனாக நியமித்து அறிவுரை, ஆலோசனை, வழி நடத்துதல் தேவை என கேட்டுக் கொண்டீர்கள். ஒரு ஆண்டில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்தது. நான் அனுப்பிய மெயில்களுக்கு பதில் அளிக்காமல் விளக்கம் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பினீர்கள்.
தடை வந்தால் என்னவாகும்
நம் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோடை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகரைப்பற்றி கேட்டபோது, அப்படி ஒன்றும் இல்லையென்று விஷாலும், கார்த்தியும் சொன்னார்கள். தற்போது அது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் செல்ல உள்ளது. அங்கு தீர்ப்பு பாதகமாக வந்தால் நடிகர் சங்கம், செலவழித்த பணம் என்ன ஆகும்?.
கலைஞர்கள் அவமரியாதை
சமீபத்தில் நடந்த மலேசிய கலைவிழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன். விழாவுக்கு முன்பே ஓட்டலில் இவ்வளவு ரூம்கள் போட்டு டிரஸ்ட் பணம் ஏன் செலவழிக்கப்பட வேண்டும்.?
பிச்சை எடுத்த கேவலம்
மலேசியாவில் உள்ள தமிழ் பத்திரிக்கையில், பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் நட்சத்திரங்கள் என வந்த செய்தியை பார்க்கவில்லையா? மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம், நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன? சுய மரியாதையை விற்று சம்பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அடுத்தமுறை தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்க முடியாது. இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும். இவ்வாறு ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்.
மக்களிடம் வசூலிக்க வேண்டாம் - அஜித்
பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது, 'நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள அஜித்தை அழைத்தனர். விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், "ஏற்கனவே படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நன்றாக சம்பாதிக்கிறோம். நாம், 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்" என்றார். இவ்வாறு எஸ்வி.சேகர் கூறினார்.
கூட்டம் இல்லை
கலை நிகழ்ச்சியை கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலிங் மைதானத்தில் நடத்தினார்கள். 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வந்ததோ வெறும் 5 ஆயிரம் ரசிகர்கள் தான் என்று கூறப்படுகிறது.
''நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இன்னும் ரசிகர்களின் பணத்தை சுரண்ட நினைப்பது ஏன் என மலேசிய ரசிகர்கள் கருதியதாகவும், மலேசியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளை சரி செய்வதை விடுத்து, நட்சத்திர விழாக்களை புறக்கணிக்கும் படி சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்துக்களாலும் ரசிகர்கள் கூட்டம் சேரவில்லை என செபராங் பெராய் மாகாண உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு சுமார் 300 கலைஞர்கள் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு விமான டிக்கெட், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவுகள், நிகழ்ச்சி தொடர்பாக சென்னை நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்திய செலவுகளை வைத்தே நடிகர் சங்கத்தில் உள் அரங்குகளை கட்டிவிடலாம் என்கிறார்கள்.
அஜித் கருத்திற்கு ஆதரவு
அஜித்தின் கருத்து நியாயமானது என்று குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. நடிகர்கள் யாரும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல, ஒவ்வொருவரும் லட்சம் மற்றும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்கையில் அவர்களுக்கு ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையை கொடுத்தாலே சங்கத்திற்கான நிதி கிடைத்துவிடும். இல்லையென்றால் இலவசமாக இரண்டு படம் நடித்தாலே போதுமானது. அதை விடுத்து மக்களிடமே வசூலிப்பது என்ன நியாயம் என சமூகவலைதளங்களில் பரவலாக கருத்துக்கள் பரவ தொடங்கிவிட்டது.
நடிகர் சங்கம், இதை புரிந்து கொண்டு, மக்களிடம் பணத்தை வசூலிக்காமல், தங்கள் சொந்த பணத்தில் கட்டடம் கட்டுவதே சிறந்தது என்று பரவலாக விவாதிக்கப்படுகிறது.