பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
வரும் பொங்கல் ரிலீசாக இதுவரை மூன்று படங்கள் வெளியாவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களுக்காக ஹீரோக்கள் இருவரும் முழு வீச்சில் புரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
சூர்யா, விக்ரம் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவர்களது ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் கேரளாவில் தங்கள் படத்தை புரமோட் பண்ணுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதனால் இருவருமே நேற்று ஒரே நாளில் கொச்சியில் முகாமிட்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்..
இருவருக்குமான ரசிகர்கள் வரவேற்பால் கொச்சியில் சில இடங்களில் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது. சூர்யா தனி ஒரு ஆளாக தனது படத்தை புரமோட் பண்ணிய சூழ்நிலையில், 'ஸ்கெட்ச்' படத்தின் புரமோஷனுக்காக விக்ரமுடன் கதாநாயகி தமன்னாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.