டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அடிப்படையில் நாடக கலைஞரான குரு சோமசுந்தரம், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடல், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, தூங்கா நகரம், படங்களில் நடித்தாலும் ஜோக்கர் படம் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பிறகு குற்றமே தண்டனை, யாக்கை, பாம்பு சட்டை படங்களில் நடித்தார்.
தற்போது வஞ்சகர் உலகம் என்ற படத்தில் கேங்ஸ்டர் தலைவராகவும், கொடூர வில்லனாகவும் நடிக்கிறார். மஞ்சுளா பீதா தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் சிபி, அனிஷா அம்புரோஸ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சாந்தினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சி.எஸ்.சாம் இசை அமைக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் மனோஜ் பீதா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். வஞ்சகர் உலகம் படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர்
குறிப்பாக குரு சோமசுந்தரம் ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருந்தது.
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். எனக்கு மிகவும் திருப்தியும், சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன என்கிறார் இயக்குனர் மனோஜ் பீதா.