ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் 2 நாட்கள் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடந்தது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு கோடிக் கணக்கில் நிதி சேரும் என்று தெரிகிறது. இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனாலும் அஜித், விஜய் உள்ளிட்ட வேறு சில முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை நடிகரும், நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலருமான எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ளார். அது வருமாறு:
நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை அழைத்தனர். அதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், "ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். அதைத் தவிர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நாம் நன்றாக சம்பாதிக்கிறோம். நாம் 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்" என்று கூறியிருக்கிறார் அஜித்.
அஜித் சொன்னதாக எஸ்வி சேகர் சொன்ன தகவலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.