கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில், திரைப்படம் துவங்குவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம், கடந்த 2016 நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கியது தொடர்பாக, சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவதற்காக, அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இது தொடர்பாக ஆறு மாதத்துக்குள் புதிய பரிந்துரைகளை அளிக்கும். அதுவரை தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கிய உத்தரவை, கோர்ட் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரத்து
இதனை ஏற்று கொண்ட கோர்ட், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. தேசிய கீதம் இசைக்கப்படும் போது உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். தேசிய கீதம் குறித்த விதிகளை மத்திய அரசு 6 மாதத்தில் அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.