இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக, புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில், திரைப்படம் துவங்குவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதி மன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கியது தொடர்பாக, சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவதற்காக, அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இது தொடர்பாக ஆறு மாதத்துக்குள் புதிய பரிந்துரைகளை அளிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கிய உத்தரவை, கோர்ட் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.