பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்தியத் திரையுலகில் அடுத்த பெரிய வெளியீடு என தெலுங்குத் திரைப்படமான 'அஞ்ஞாதவாசி' திரைப்படத்தைச் சொல்லலாம். கடந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப் பெரும் வசூல் சாதனை படைத்தது.
அதற்கடுத்து தென்னிந்தியத் திரையுலகில் பெரிய வசூலைக் குவித்த படமாக தமிழ்ப் படமான 'மெர்சல்' படம் அமைந்தது. அந்தப் படம் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மூன்று வாரங்கள் கழித்தே வெளியானது.
ஆனால், 'அஞ்ஞாதவாசி' படம் தெலுங்கிலேயே தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சுமார் 40க்கும்மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 600 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாக உள்ளதாம். அது 'பாகுபலி 2' படத் தியேட்டர்களை விட அதிகம் என்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானாவிலும் இப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளது.
'பாகுபலி 2' படத்தின் பிரிமீயர் காட்சிகள் மூலம் கிடைத்த வசூல், முதல் நாள் வசூல் ஆகியவற்றை 'அஞ்ஞாதவாசி' படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.