ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், அதிதி ராவ் முதன்மை ரோலில் நடிக்க, சரித்திர பின்னணியில் உருவாகி உள்ள படம் பத்மாவதி.
இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த டிசம்பரில் வெளியாக வேண்டிய படம் தாமதமானது. படத்தில் நடித்த தீபிகா, இயக்குநருக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. கொலை மிரட்டல்கள் கூட வந்தன. இந்தப்படம் வெளியாக விட மாட்டோம், மீறி வெளியிட்டால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம், தீயிட்டு கொளுத்துவோம் என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்ப, சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படமும் சென்சார் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் சென்சார் போர்டு, 21 கட், படத்தின் பெயர் மாற்றம் மற்றும் 3 முறை விளக்க நோட்டீஸ் போன்றவற்றுக்கு ஒப்புக்கொண்டால் யு/ஏ சான்று வழங்குவதாக அறிவித்தது. அதன்படி படத்திற்கு பல கட்கள் கொடுக்கப்பட்டு, தற்போது படம் சென்சார் ஆகி முடிந்துள்ளது. படத்திற்கு யு/ஏ வழங்கியுள்ளனர். சென்சார் கிடைத்த மகிழ்ச்சியால், வருகிற ஜன., 25-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதேசமயம் படம் சென்சார் ஆனாலும், எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தை திரையிட விட மாட்டோம் என்று முழங்கி வருகின்றனர்.