அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
மனாமா: நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார். குறிப்பாக ஜப்பானில் அவருக்கு ரசிகர் மன்றமே உள்ளது. இந்நிலையில், பஹ்ரைனில் ரஜினிகாந்த்திற்கு ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹோட்டல் ஜுப்பேர் கேட் உள்ளரங்கில் இதற்கான நிகழ்வு நடந்தது.
தலைவராக நீலகிரியை சேர்ந்த சுரேஷ், பொதுச்செயலாளராக சென்னையை சேர்ந்த ரமேஷ், பொருளாளராக குன்னூரை சேர்ந்த ரமேஷ் முத்தன், துணை பொது செயலாளராக நீலகிரியை சேர்ந்த சுதீர், உறுப்பினர் செயலாளராக கன்னியாகுமரியை சேர்ந்த பிரபின் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
மன்றத் தலைவர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அனைத்து ரசிகர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரஜினியின் யோசனைக்கு ஏற்ப, பஹ்ரைனில் இந்த மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து மாநில ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவும் துவங்கப்பட்டுள்ளது, இது பஹ்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு நற்பணிகளையும், சமுக சேவைகளையும் செய்யும் அமைப்பாக, அரசியல் சாயம் இல்லாமல் செயல்படும். விரைவில் ரஜினிகாந்த், பஹ்ரைன் வந்து தனது ரசிகர்கள் முன் தோன்றுவார்” என்றார்.
பஹ்ரைனிலிருந்து முனைவர். பெ. கார்த்திகேயன்