பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு 'சீம ராசா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய 75 சதவிகிதம் முடிந்து விட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
'இன்று நேற்று நாளை' படத்தை டைம் டிராவல் கதையாக சயின்ஸ் பிக்ஷ்ன் ஜானரில் இயக்கிய ரவிக்குமார், தனது அடுத்த படத்தை சயின்ஸ் பிக்ஷ்ன் ஜானரிலேயே இயக்க உள்ளார். கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் பிரீ புரடக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. படத்தின் பட்ஜெட்டில் 25 சதவிகிதம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செலவு.
இந்த படத்தை 50 கோடிக்கு பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இந்தப் படத்திற்கு இசை அமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 'ரெமோ, 'வேலைக்காரன்' 'சீமராசா' படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் தன்னுடைய நண்பர் பெயரில் சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார்.