'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ஜெய்சிம்ஹா. அதிரடி அரசியல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒரு முக்கிய காட்சி பிரமாண்டமாய் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சியில் 5 ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், 200 பேருந்துகள், 150 மினி லாரிகள், 50 பைக்குகள், 100 ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் வருவது போன்று படமாக்கப்பட்டிருக்கிறது. அதோடு 2 ஆயிரம் பூசாரிகளும் இந்த காட்சியில் வருகிறார்களாம்.
இப்படியொரு பிரமாண்ட காட்சி இதுவரை எந்தவொரு படத்திலும் உருவாகவில்லை என்கிறார்கள். இந்த ஒரு காட்சியை கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு மேலாக படமாக்கியிருக்கிறார்களாம். இந்த ஜெய்சிம்ஹா படம் ஜனவரி 12-ந்தேதி திரைக்கு வருகிறது.