தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவுடன் ஒரு நடிகை ஜோடி சேர்ந்தாலே பொறாமையாகப் பார்ப்பார்கள் பெண் ரசிகைகள். சூர்யாவுக்கு இரண்டு ஜோடி என்றால் கேட்கவா வேண்டும். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க உள்ள படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்து, அது பற்றிய அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்கள். இந்தப் படத்தில் முதலில் ரகுல் ப்ரீத் சிங் தான் நாயகியாக நடிக்கப் போகிறார் என்று எப்போதோ தகவல் வெளியாகியது. ஆனால், சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது.
இப்போது படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நாயகியாக நடிக்கப் போகிறார் என எப்போதோ வந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்கள். நேற்று இரவு இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் இதற்கு முன்பு கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்றூ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது அண்ணன் சூர்யாவுடன் ஜோடி சேர உள்ளார்.
படத்தில் இரு நாயகிகள், இயக்குவது செல்வராகவன் என்பதால் கண்டிப்பாக முக்கோணக் காதல் கதையாகவோ, அல்லது காதல் கதையாகவோ இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.