‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து பெண்கள் நல அமைப்பை (WCC) துவங்கினார்கள் சில நடிகைகள். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் மம்முட்டி குறித்து பார்வதி பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பின. இதில் இந்த அமைப்பை சேர்ந்த ஓரிரு நடிகைகள் தவிர, வேறு யாரு பார்வதியின் பேச்சை ஆதரித்து கருத்து சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நடிகை மஞ்சு வாரியர் கூட, பார்வதி சொன்ன கருத்தை தங்களுடைய மொத்த கருத்தாக கருத தேவையில்லை என கூறினாராம்.
மேலும் இந்த பெண்கள் நல அமைப்பு பெண்களை பாதுக்காக்க தானே தவிர, தேவையில்லாமல் பிரச்சனைகளை இழுத்துப் போடுவதற்காக அல்ல என்பதால், இந்த அமைப்பிலிருந்து மஞ்சு வாரியர் விலகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.