பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் மலையாளத்தில் 'ஆடு-2' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் 'திமிரு' புகழ் வில்லன் நடிகரும், சமீபத்தில் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றவருமான விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஓரளவு வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மரக்கொட்டகையை ஜீப்பில் இருந்தபடியே விநாயகன் குண்டுவீசி தகர்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் விநாயகன் வீசிய வெடிகுண்டு படக்குழுவினரே எதிர்பாராத அளவுக்கு பெரிய அளவில் வெடித்து, அந்த வெப்பம் விநாயகத்தையும் நன்றாகவே தாக்கியதாம். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனே இரண்டு வாளி தண்ணீரை விநாயகன் தலையில் ஊற்றி வெப்பச்சூட்டில் இருந்து அவரை மீட்டனராம்.