இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்ததில் இருந்தே தமிழகம் முழுக்க ரஜினி அரசியல் ஜூரம் பற்றிக்கொண்டது. எந்த டிவி.,யை பார்த்தாலும் அதுப்பற்றிய விவாதங்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. இதில் ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் உண்டு.
அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் என்று பலர் தொலைக்காட்சிகளில் பேட்டியும் தருகிறார்கள். ஆனால் இது போன்று பேட்டிகள் வேண்டாம் என ரஜினி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
சமீபகாலமாக ரஜினி ஆதரவாளர்கள் என்று கூறி சிலர், தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகின்றனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்க யாரையும் நியமிக்கவில்லை. தற்போது கருத்து கூறுபவர்களின் கருத்து எங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் கருத்தல்ல என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
ஏற்கனவே ரஜினி கூறியது போன்று அன்றாடம் நடக்கும் விவாதங்களில் பேசாமல், கட்சி அறிவிப்பு வரும் வரை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும். ரஜினியின் அனுமதியின்றி இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பது முறையல்ல. ஆகவே, தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்கள், ரஜினி ஆதரவாளர்கள் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.