என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறிவிக்கப்படாத பஸ் ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் பாமர மக்களை அதிகமாக பாதித்துள்ளது. விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகமாகும் என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்ய வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.