ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட கலை நட்சத்திர நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் மலேசியாவில் குவிந்துள்ளது. ரஜினியும், கமலும் சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவரும், நடிகருமான வாராகி என்பவர் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். "2016ம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட்டில் 6 கோடி வரை முறைகேடு நடந்தது. இந்த நிலையில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி மேலும் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் கலை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மலேசியாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்ததோடு நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடந்ததாக மனுதாரார் குறிப்பிடும் புகார் மீது போலீசார் 2 மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.