டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இன்றும், நாளையும் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற உள்ளது. இதற்காக பல நடிகர், நடிகைகள், கலைக் குழுவினர் மலேசியாவிற்குப் பயணமாகியுள்ளனர்.
நேற்று மலேசியாவிற்கு சுமார் 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர். ரஜினிகாந்தும் அவர்களுடன் சென்றிருக்கிறார். விமானத்திலேயே அவருடன் பல நட்சத்திரங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அனைவருடனும் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசி புகைப்படம் எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனும் அந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதே சமயம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்து தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரும் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், இந்த கலை விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் எனத் தெரிகிறது.
அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பதை லட்சியமாகவே வைத்திருக்கிறார். அது குறித்து பல முறை சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது அவரைப் போலவே விஜய்யும் நடந்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அஜித் வராத போது தான் மட்டும் ஏன் வர வேண்டும் என அவரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த உள்ளனர்.