பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படம் மூலம் நடிகரானார். அதன் பின் தெலுங்குப் படங்களில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அங்கு மீடியாக்களைப் பற்றியும், தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றியும் சில சர்ச்சைகளை அவர் எழுப்பியதால் அங்கு ஓரம் கட்டப்பட்டார். முன்னணியில் இருந்த அவருடைய மார்க்கெட் அங்கு பின்னணிக்குப் போனது.
ஹிந்தியிலும் ஆமீர்கான் நடித்து சூப்பர்ஹிட்டாக ஓடிய 'ரங் தே பசந்தி' படத்திலும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தியிலும் ஒரு படத்தில்தான் நடித்தார். தெலுங்கு, ஹிந்தியை விட தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். “காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக்' என விதவிதமான படங்களில் நடித்து இங்கும் ஒரு மார்க்கெட்டைப் பிடித்தார். கடந்த வரும் சித்தார்த் நாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளிவந்த 'அவள்' படம் தமிழில் லாபகரமான வெற்றியைத் தந்துள்ளது.
இப்போது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார் சித்தார்த். திலிப் கதாநாயகனாக நடித்து வரும் 'கம்மார சம்பவம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “என்னுடைய முதல் மலையாளப் படம். இது ஒரு சிறப்பான ஸ்பெஷல் படம். ரதீஷ் அம்பாட் இயக்கத்தில், முரளி கோபி எழுத்தில் உருவாகும் படம். திலீப் நடிக்கிறார். இப்படத்திற்காக மிகவும் காத்திருக்கிறேன், ஆரம்பமாகிவிட்டது,” என சித்தார்த் அவருடைய முதல் மலையாளப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.