டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை: தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும்; அதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு, அவருடன் இணைந்து, தமிழகத்தில் இருந்து, ஏழு புதிய குரல் தேடல் என்ற, நிகழ்ச்சியை, 7 அப் நிறுவனம் நடத்துகிறது. பலகட்ட போட்டிகளுக்குப் பின், தேர்வான ஏழு பேருடன், வரும், 12ம் தேதி, சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் பாட உள்ளார்.
இதுகுறித்தும், தற்போதைய தமிழக அரசியல் குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: இசை பயணத்தில், 25 ஆண்டுகளை முடித்து விட்டோமா என, திரும்பி பார்த்தால், வயதானது போலாகி விடும். இனிமேல் தான், நிறைய செய்ய வேண்டியுள்ளது. சென்னையில், இசை நிகழ்ச்சி நடத்துவது சந்தோஷமாக உள்ளது. வரும், 12ல், 99 சதவீதம் தமிழ் பாடல்களையே, மூன்று மணி நேரம் பாடப்போகிறோம்.
எதிர்கால தலைமுறையினருக்கு, யூ -டியூப் போன்ற தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. நான் கூட, சில சமயம் அதிலிருந்து தான், நல்ல குரல்களை தேடுகிறேன். இந்த இசை நிகழ்ச்சியால் கிடைக்கும் நிதி விவசாயிகளுக்கும், கல்விக்கும் பயன்பட உள்ளது. நான் தனிமை விரும்பி என்பதால், அரசியலில் நாட்டமில்லை. ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சை நானும் கேட்டேன்; நன்றாக இருந்தது.