டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தடையறத்தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இந்த படங்களுக்குப்பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்ற அவர், சில முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முன்வரிசை நாயகியானார்.
அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தவர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்தார். அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என இரண்டு மெகா படங்களில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இரண்டு படங்களிலுமே ரகுல் பிரீத் சிங் இல்லை. அவர் இடத்தை கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோர் கைப்பற்றி விட்டனர். அந்த வகையில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேசும், சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். இதன்மூலம் இரண்டு மெகா படங்களின் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.