விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். விஜய் சேதுபதியுடன், கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த வசனம் இது...
விஜய் சேதுபதி : ராவணன் சீதைய தூக்கிட்டு வந்து கை படாம வச்சிருந்தான். நாம அவனை அரக்கன்னு சொல்றோம். ராமன் சீதையை காப்பாத்தி கொண்டு போயி சந்தேக தீயில போட்டு எரிச்சான் அவனை நாம கடவுள்னு சொல்றோம். இப்ப சொல்லு ராமன் கெட்டவனா? ராவணன் கெட்டவனா?
ராஜ்குமார்: ராமன்தான் கெட்டவன், ராவணன் நல்லவன்
ரமேஷ் திலக்: ராமன் கடவுள்டா, ராவணன்தான் கெட்டவன்
விஜய் சேதுபதி: இந்த கதையில ராமனும் நான் தான் ராவணனும் நான் தான்.
இப்படியாக வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த வசனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராம பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. டீசரில் இடம்பெற்றிருந்த இந்த வசனம் படத்திலும் இடம்பெற்றிருந்தது. "நாம் ஜாலிக்காக படம் எடுக்கிறோம். நாம் எடுக்கிற படம் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக்கூடாது" என்று விஜய் சேதுபதி கூறியதையடுத்து அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலான வேறு வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.