பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஸ்வரூபம் பட வேலைகளில் பிஸியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், சிலகாலம் டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு தளத்திலும் ஆர்வமின்றி அமைதியாக இருந்தார். இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பற்றியும், பணம் வாங்கி ஓட்டுபோட்ட மக்களையும் கடுமையாக விளாசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...
ஜனநாயகத்தின் வீழ்ச்சி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். இது ஊரறிய நடந்த குற்றம். இந்த குற்றத்துக்கு மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய சேகம். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி
பிரிட்டிஷ் ஆதிக்கமே இருந்திருக்கலாம்
இப்படியொரு மிகப்பெரிய அவமானத்தை கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள். இதற்கு பேசாமல் நாம் பிரிட்டிஷின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாம். அன்றைக்கு ரோடுகளையும், ரயில்களையும் விட்டு கோகினூர் வைரத்தை சுரண்டினார்கள். இப்போது அது ரூ.20 டோக்கன்களாக மாறியிருக்கிறது.
திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம்
அந்த தேவதூதனை தேர்ந்தெடுத்த ஆர்கே.நகர் மக்களுக்கு.... சென்னை வெள்ளத்தின் போது உங்களின் உதவிகள் எப்படிப்பட்டது என்று உலகத்திற்கு காட்டினீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் இன்று ரூ.20 டோக்கனுக்கு விலை போய் இருப்பது பிச்சை எடுப்பதை விட கேவலமானது. அதிலும் திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம் எங்கேயாவது நடந்தது உண்டா. உங்களிடம் மனிதம் இல்லாமல் இல்லை, வறுமை உங்களை அப்படி நகர்த்துகிறது. அந்த வறுமையை இல்லாமல் செய்யும் ஒரே ஆயுதம் உங்களின் ஓட்டுகள் தான்.
ரூபாய் வெல்லாது
எல்லா நேரங்களிலும் ரூபாய் வெல்லாது, ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு வாழ முடியாது. ஓட்டுக்கு லஞ்சமாக மக்களுக்கு கொடுத்த பணத்தை மக்களுக்கு அவர்கள் அர்ப்பணித்து இருந்தாலே, தமிழகத்தின் பாதி சோகங்கள் தீர்ந்துவிடும்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.