‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தற்போது அரசியல் களம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருக்கிறார்கள். இருவரது ரசிகர்களும் அரசியலுக்கு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
ரஜினியும், கமலும் இணைந்து அரசியல் செய்வார்களா? எதிர் எதிர் களத்தில் நிற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினி ஆன்மீக அரசியலையும், கமல் சமூக அரசியலையும் முன்வைக்கிறார்கள். இருவரது செயல்பாட்டையும் தமிழக மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த நிலையில் ரஜினியும், கமலும் நாளை மறுநாள் (ஜன., 6ம் தேதி, சனிக்கிழமை) மலேசியாவில் சந்திக்க இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட வளர்ச்சிக்காக நாளையும், நாளை மறுநாளும் மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்ள நாளை ரஜினிக்கும், கமலுக்கும் நடிகர் சங்கம் சார்பில் விமானம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நாளை மலேசியா செல்கிறார்கள்.
அங்கு இருவரும் தனியாக சந்தித்து பேசுவார்களா? அல்லது விழாவில் சந்திப்பார்களா? அரசியல் குறித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. திரையுலகினரும், அவர்களை விட அரசியல்வாதிகளும் இதனை உன்னிப்போடும், பரபரப்போடும் கவனித்து வருகிறார்கள்.