டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்திலும் ஒவ்வொரு வருடமும் பல புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமான நாயகியாகவும், புகழ் அடையும் நாயகியாக வளர்கிறார்கள்.
நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்து முதலில் வெளிவந்த படம் 'இது என்ன மாயம்'. ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் 'ரஜினி முருகன்'. முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே 'பாம்பு சட்டை, தொடரி' ஆகிய படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷை வெற்றிகரமான நாயகியாக மாற்றியது. விஜய்யுடனும் 'பைரவா' படத்தில் ஜோடி சேர்ந்தவர், சூர்யாவுடனும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். பள்ளியில் படித்த காலத்திலேயே சூர்யாவின் ரசிகையாக இருந்தேன் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இப்போது கீர்த்தி சுரேஷ் வழியிலேயே சூர்யாவுடைய ரசிகையாக இருந்த சாய் பல்லவி, அடுத்து அவருடன் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கீர்த்தி சுரேஷ் போலவே தமிழில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாகவே தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் ஒரு படம் என ஒப்பந்தம் ஆகிவிட்டார் சாய் பல்லவி. அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'கரு' படம் அடுத்த மாதம்தான் வெளிவர உள்ளது.