இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தித் திரையுலகில் பரபரப்பான இயக்குனராக இருந்தவர் ராம்கோபால் வர்மா. ஹிந்திப் பக்கம் சென்று விட்டாலும் அவருடைய தெலுங்குப் பாசத்தை விடாதவர். அவ்வப்போது தமிழ்நாட்டு அரசியல் பக்கமும், திரையுலகப் பக்கமும் சாய்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவார்.
சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை விட்டு விலகியர், நேற்று மீண்டும் டுவிட்டருக்கு வந்துவிட்டார். வந்ததுமே ரஜினிகாந்தைப் பாராட்டித் தள்ளிவிட்டார். “ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நுழைவு பற்றிய அறிவிப்பில், இதற்கு முன் அப்படி ஒரு சக்தியைப் பார்த்ததில்லை. என்னுடைய கணிப்புப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்காக மட்டுமே வாக்களிப்பார்கள். அவருக்கு எதிராக எந்த ஒரு கட்சி நிற்பதும் முட்டாள்தனமானது. சிலரால் தமிழ் மக்கள் அவர்களது பெருமையை இழந்துவிட்டார்கள், நான் அதைத் திரும்பக் கொண்டு வருவேன் என ரஜினிகாந்த் பேசியிருப்பது மிகச் சிறந்த வார்த்தை.
ரஜினிகாந்தைப் போலவே பவன் கல்யாணும் ஆந்திராவில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல ஒரு தைரியம் பவனுக்கு இல்லை என அவரது ரசிகர்கள் நினைத்து விடுவார்கள். அந்த சூப்பர் ஸ்டார் போல நம் சூப்பர் ஸ்டாருக்குத் தைரியமில்லை என்பது தெலுங்கு மக்களுக்கு அவமானமானது. அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகத்தான் பவன் கல்யாண் இருக்கிறார் என தெலுங்கு மக்களும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள்,” என அவருடைய பதிவில் குறிப்பிட்டு பவன் கல்யாணை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
அதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள். சில மாதங்கள் டுவிட்டரை விட்டு போனவர் மீண்டும் வந்து முதல் பெரிய சர்ச்சையை ஆரம்பித்துவிட்டார்.