ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகளவில் செயல்படும் பிரபல நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்திற்கு பல தொழில்கள் உள்ளன. லைகா நிறுவனம், சினிமா துறையிலும் கால்பதித்து, தமிழில் கத்தி படம் மூலம் என்ட்ரியானது. தொடர்ந்து பல படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வருகிறது. தற்போது ஷங்கர் - ரஜினி - அக்ஷ்ய் கூட்டணில் 2.O எனும் பிரமாண்ட படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது.
லைகா பிலிம்ஸின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராஜூ மகாலிங்கம். இவர், லைகாவில் தான் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "2.O படம் முதலே ரஜினியுடன் மிகவும் இணக்கமாக பழகி வருகிறேன். அவரின் எளிமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அவருடைய கட்சியில் என்னை இணைய வைத்தது. ரஜினியின் கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன்" என்று கூறியுள்ளார் ராஜூ மகாலிங்கம்.