தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப்பிறகு இந்தியா முழுக்க பரிட்சயமான நடிகராகி விட்டார் பிரபாஸ். தற்போது சாஹோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படமும் பாகுபலி படங்களைப்போலவே தமிழ், தெலுங்கு, இநதி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அதோடு, இந்த படத்தை இந்தியிலும் மெகா ஹிட் படமாக்கி விட வேண்டும் என்பதற்காகவே, ஸ்ரத்தா கபூர், நீல்நிதின்முகேஷ், ஜாக்கி ஷெராப், மந்திராபேடி என பல ஹிந்தி பிரபலங்களை நடிக்க வைத்துள்ளனர்.
சாஹோ படத்தை முடித்ததும் நேரடி இந்தி படமொன்றில் நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபாஸ். அதற்கான கதை கேட்டு ஓகே பண்ணி வைத்துள்ள அவர், ஹிந்தி மொழியை தெரிந்து கொண்டால் நடிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால், தற்போது தீவிரமாக இந்தி பயின்று வருகிறார்.
இதுப்பற்றி பிரபாஸ் கூறியதாவது, ஹிந்தி படம் பார்க்க விரும்புவேன். நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன். அங்கு வசிக்கும் 60 சதவீத மக்கள் ஹிந்தி பேசுபவர்கள். பாலிவுட்டில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. மூன்றாண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் ஒரு கதையை கேட்டு ஓகே சொன்னேன். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சாஹோ படத்தை முடித்ததும் பாலிவுட்டில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.