'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. பொங்கல் பண்டிகை அன்றோ அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தன்றோ கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை, செயல்திட்டம் ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களையும் சந்திக்க இருக்கிறார்.
ரஜினி அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சிகள் தான் கருத்து சொல்லி வருகின்றன. ஒரு சில நடிகர்கள் தவிர்த்து மற்றவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினியை ஆஹா ஓஹோ என்றவர்கள் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி கட்சியில் முதல் ஆளாக இணைகிறார்.
"ரஜினியின் காவலன் நான்" என்று அறிவித்திருக்கிறார். நாளை மாலை 4 மணிக்கு அம்பத்தூரில் தன் தாய்க்கு கட்டியிருக்கும் கோவிலுக்கு பூஜை செய்து விட்டு இதனை முறைப்படி பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்நிலையில், லாரன்ஸின் தீவிர ரசிகரான கடலூரை சேர்ந்த சேகர் என்பவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேட்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கடலூர் செல்கிறார் லாரன்ஸ். இதனால் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து, ரஜினியுடன் இணைவதாக அறிவிக்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
மாறாக மதுரையில் 7-ம் தேதி ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் லாரன்ஸ் கலந்து கொள்ள ஏற்கனவே சம்மதம் சொல்லியிருந்தார். அதில் தான், ரஜினியின் கட்சியில் இணைவதை அறிவிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை விட தீவிர பக்தர் என்றே சொல்லலாம். ரஜினி பாணியிலேயே ராகவேந்திர பக்தரும் கூட. ராகவேந்திரருக்கு கோவிலும் கட்டி உள்ளார். படங்களில் ரஜினியின் சாயலில் காட்சிகள் வைப்பார். அடிக்கடி ரஜினியை சந்திப்பார். ரஜினி பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடுவார். தற்போது ரஜினி கட்சியை முறைப்படி அறிவிக்கும் முன்பே தன்னை அவருடன் இணைத்துக் கொள்ள இருக்கிறார்.