‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்திய சினிமாவில் இருந்து 100 கோடி கிளப் தமிழ் சினிமாவையும் கடந்த சில வருடங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. 'எந்திரன்' படம் தான் தமிழ் சினிமாவின் உண்மையான முதல் 100 கோடி படம். அதன் பின்னர் பல படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றது என்று சொல்லப்பட்டாலும் அதன் உண்மை நிலவரம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் முதன் முதலில் 100 கோடி வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையை கடந்த வாரம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் புரிந்தது. அந்த சாதனையை சில மாதங்கள் கழித்து வெளிவந்த 'மெர்சல்' படமும் புரிந்தது. இருப்பினும் 'பாகுபலி 2' வசூல் செய்த தொகையை 'மெர்சல்' தமிழ்நாட்டில் கடக்கவில்லை என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில் 500 கோடி ரூபாய் என்ற புதிய கிளப்பை 'பாகுபலி 2' படம் 2017ல் நிகழ்த்தியுள்ளது. அதன் ஹிந்தி டப்பிங் மட்டுமே 500 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் முதன் முதலில் 500 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட படம் என்ற பெருமை 'பாகுபலி 2' படத்திற்குக் கிடைத்துள்ளது.
அந்த சாதனையை இன்னும் சில மாதங்களில் வெளிவர உள்ள '2.0' படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு கடந்த வருடமே எழுந்தது. இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி என்கிறார்கள்.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார் என தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வசூல் சாதனை படைக்கும் இரண்டு ஹீரோக்கள் இந்தப் படத்தில் இருப்பதால் கடந்த வருட 500 கோடி கிளப்பை ஒரே ஆண்டில் முறியடித்து 1000 கோடி கிளப்பை உருவாக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். அப்படி ஒன்று நடந்தால் அது தமிழ்த் திரையுலகத்திற்குப் பெருமை.