பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களை முடித்துள்ள தனுஷ், அடுத்து மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அவரது வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார்.
கிருஷ்ணா, ரோபோ சங்கர், வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மலையாள நடிகர் டொமினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். சாய் பல்லவி ஹீரோயின். யுவன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும், மாரி 2 தொழில்நுட்ப குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சியாளராக சில்வா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள். இம்மாதமே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதேப்போன்று தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். சாய் பல்லவி ஹீரோயின். இது சூர்யாவின் 36வது படம். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.