அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
ரஜினி, அரசியல் பிரவேசம் உறுதியாகி இருக்கிறது. விரைவில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிக்க இருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன.
ரஜினியின் அரசியல் வருகையால், தமிழகம் - கர்நாடகா இடையேயான பிரச்னைகள் தீர்க்கப்படும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர், பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எங்கள் குடும்பம் வறுமை நிலையிலிருந்து கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. எவ்வளவு உயர்ந்தாலும் ரஜினி தான் பட்ட கஷ்டத்தை மறக்கவில்லை. தன்னைப்போல யாரும் கஷ்டப்படக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும், அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி தான் பிறந்த கர்நாடகாவுக்கும் ரஜினி நன்மை செய்வார். அவரது கனவுகள் நிறைவேறும்.
தமிழகம், கர்நாடகா இடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவை அனைத்தும் ரஜினிக்கு நன்றாகத் தெரியும். அதை தீர்க்கும் வழியும் அவருக்கு தெரியும். அவர் கட்சி பெயர், சின்னத்தை எப்போது அறிவிப்பார் என்று தெரியாது. பொங்கல் தினத்தில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது தனது மன்றங்களை ஒருங்கிணைப்பதிலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.