'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக அரசியல் சார்ந்த மற்றும் சமூக விஷயங்களை கையில் எடுத்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். பெங்களூர் பிரஸ் கிளப் சார்பில் அவருக்கு சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டபின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெங்களூர் அமைதியும், அழகும் நிறைந்த ஊர். ஆனால் அதை கெடுக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு பெங்களூர் மக்கள் அனுமதிக்ககூடாது. எனது தோழி கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகுதான் நான் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ஆனால் என்னை நிர்ப்பந்தம் செய்தால் அரசியலுக்கு வரவும் தயங்க மாட்டேன்.
ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அவருக்கு ரசிகர்கள் பலம் இருக்கிறது. இது தொண்டர்கள் பலமாக மாறும். ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது ரசிர்கள் சந்தோஷமாக வரவேற்பதை போன்றே, சக நடிகனாக நானும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.