ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் நயன்தாரா தொடர்ந்து நம்பர்-1 ஹீரோயினாக வலம் வருகிறார். 2017-ம் ஆண்டில், இவர் நடித்து வெளியான அறம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டும் படி இருந்தது. அதோடு நயன்தாராவிற்கு இப்படத்தினால் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு தன் கைப்பட எழுதிய வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
என் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிய ரசிகர்களுக்கு நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அன்பால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன். உங்களின் அன்பு, என் வாழ்க்கையை அழகாக்கி உள்ளது.
உழைப்பை முன்னெடுத்து, மற்றவைகளை ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டும் என்பதை உங்களின் அன்பால் புரிந்து கொண்டேன். உங்களின் அன்பால் பொழுபோக்கான படங்களை மட்டுமல்லாது அறம் மாதிரியான நல்ல படங்களையும் என்னால் கொடுக்க முடிந்தது.
எனக்கு ஆதரவளித்த மீடியாக்கள், சமூகவலைதளங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட எல்லோருக்கு நன்றி. உங்கள் இதயத்தில் எனக்கும் சின்னதாய் ஓர் இடம் கொடுத்ததற்கு நன்றி. 2018-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும். எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.