ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மம்முட்டி நடிக்கும் புதிய படமான 'ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்' படத்தின் துவக்கவிழா இன்று காலை கேரளாவில் நடைபெற்றது. இதில் பிரபல மலையாள இயக்குனர்கள் ஜோஷி, சித்திக், வைசாக் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமாவில் இருந்து டைரக்டர் ராமும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.
“திரையுலகில் எனது குருநாதர் என்றால் பாலுமகேந்திரா தான்.. ஆனால் மம்முட்டியை பொறுத்தவரை, ஒரு ரசிகராக இருந்த நான் 'பேரன்பு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்த பிறகு அவரை எனது இரண்டாவது குருவாக ஏற்றுக்கொண்டேன். அந்த அளவுக்கு சினிமா குறித்து பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். 'பேரன்பு தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது” என பேசினார் இயக்குனர் ராம்.