துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பெங்களூருவைச் சேர்ந்தவர் மனீஷா யாதவ். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பொட்டு படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாட்டுக்கு நடனம் ஆடினார். தற்போது திருமணமாகி செட்டிலாவிட்ட மனீஷா, தனக்கு முக்கிய கேரக்டர் என்று சொல்லி ஒரு பாட்டுக்கு ஆட வைத்து விட்டார் வெங்கட்பிரபு என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :
சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பனசுந்தரி பாடல் தான் கதையின் முக்கிய திருப்பம். பாடலை தொடர்ந்து சில காட்சிகளும் இருக்கும். அதுவும் முக்கியமானது என்றார். அதை நம்பித்தான் அந்த பாட்டுக்கு ஆடினேன், நடித்தேன். ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் அது வெறும் குத்துப்பாட்டு என்று தெரிந்தது. வெறும் கவர்ச்சிக்காகவே அந்த பாடல் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. குத்துப்பாட்டு என்று சொல்லியிருந்தால் ஆடியிருக்கவே மாட்டேன். பாட்டுக்கு பிறகு என்னை சொப்பன சுந்தரி என்று அழைக்கிறார்கள் அதுவும் பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.