மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் வெளியான 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியது தனக்கு வருத்தமளிக்கிறது என ஒரு நிகழ்வில் நடிகை பார்வதி குறிப்பிட்டார். இதை தொடர்ந்து மமுட்டியின் ரசிகர்களில் சிலர் எல்லை மீறிப்போய், அவருக்கு கொலை, பாலாதகார மிரட்டல்கள் விடுத்தனர். பார்வதி கொடுத்த புகாரின் பேரில் இது தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் தான் பேசியது குறித்து மம்முட்டியிடம் பார்வதி விளக்கம் சொல்ல, போனிலேயே அவருக்கு ஆறுதல் சொன்னதோடு, இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவரை தான் தப்பாக நினைக்கவே இல்லை என்றும் கூறினாராம் மம்முட்டி. இதைத்தொடர்ந்துதான் மம்முட்டி தனது ரசிகர்களிடம் கண்ணியமாக நடக்குமாறு அறிவுரை கூறினார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தின் பின்னணியில், சர்ச்சைக்கு வித்திட்ட 'கசபா' படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் இருப்பதாகவும் அவர்தான் சோஷியல் மீடியா மூலமாக மம்முட்டியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களை பார்வதிக்கு எதிராக தூண்டி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.