மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்கி விட்டாலோ, அல்லது முதல் பட ஹிட் கொடுத்து விட்டாலோ அடுத்த பட வாய்ப்பு வரிசைகட்டி நிற்கும் என்பதில் உண்மை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் ரவி அப்புலு. கடந்த 2001ம் ஆண்டு விஜய், ரிச்சா பல்லட் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கியவர் ரவி அப்புலு. முதல் படம் விஜய் படம், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு, படமும் ஹிட். அதனால் அடுத்த படம் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அடுத்த படம் கிடைப்பதற்கு 16 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பல ஹீரோக்கள், கம்பெனிகளில் ஏறி இறங்கி கதை சொல்லியும் இப்போதுதான் செயல் என்ற படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளரும், ஹீரோவும் கிடைத்ததும். அந்த புதுமுக ஹீரோவுக்கு ஏற்ப கதை எழுதி அவர் இயக்கி உள்ள படம்.
சி.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க ஷேத்ரா பிலிம்சார் தயாரித்துள்ளனர். இதில் ராஜன் தேஜஸ்வர், தருஷி என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் ரேணுகா, முனீஷ்காந்த், வினோதினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். படம் பற்றி ரவி அப்புலு கூறியதாவது:
ஷாஜஹான் படத்துக்கு பிறகு நான் இயக்கும் படம் இது. ரவுடிகளுக்கு மக்களின் பயம்தான் பலம். அப்படி பயமுறுத்தி ஒரு மார்க்கெட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு ரவுடியை ஒரு கழிப்பிட பிரச்சினையில் ஹீரோ அடித்து விடுகிறார். ரவுடி மீதான பயம் போய்விடுகிறது. அதை மீட்டெடுக்க வேண்டுமானால் அடித்தவனை அடித்த இடத்தில் திருப்பி அடிக்க வேண்டும். அதற்கு ரவுடி போடும் திட்டங்களும், அந்த திட்டத்தலிருந்து ஹீரோ தப்பிப்பதும்தான் கதை. என்கிறார் ரவி அப்புலு.