இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவுக்கு முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து கிராமத்து பேய் படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பார்க்கத் தோணுதே என்பது படத்தின் தலைப்பு. வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரிக்கும் படத்தை ஜெய் செந்தில்குமார் இயக்குகிறார். ஹர்ஷா, சாரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜி.ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், மனீஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெய் செந்தில்குமார் கூறியதாவது:
வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள். அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில் இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது.அவள் மீதிருந்த பேய் விலகியதா? காதலர்கள் ஒன்றினைந்தார்களா? என்பது தான் கதை.
காதல் காமெடி ஆக்ஷன் திகில் கலந்த படமாக பார்க்கத் தோனுதே உருவாகி உள்ளது. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகனேக்கல் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாகிறது.