தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை த்ரிஷா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக இருக்கிறார். யுனிசெப் அமைப்பின் சார்பில் திருப்போரூர் அருகே உள்ள வடநெம்மேலி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளை நடிகை த்ரிஷா தானே ஒரு கழிப்பறை கட்டி பணியில் பங்கேற்ற துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டர். திரிஷா வந்திருப்பதை அறிந்த அக்கம் பக்கத்துக்கு கிராமத்தினர் ஆயிரக் கணக்கில் திரண்டனர்.
"மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று கழிப்பிட வசதி. ஆனால் அந்த வசதியை பல கோடி மக்கள் பெறாமல் இருப்பது மிகப்பெரிய சோகம். திறந்தவெளி கழிப்பிடங்களால் வரும் தீமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதோடு. நவீன கழிப்பிடம் கட்ட வசதியையும் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். இந்த பணியை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் முன்னெடுத்து செல்வதில் ஆர்வமா இருக்கிறேன்" என்றார் த்ரிஷா.