Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

எனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி

31 டிச, 2017 - 14:22 IST
எழுத்தின் அளவு:
imman-annachi-interview

நெல்லை தமிழில் நெஞ்சையள்ளும் பேச்சால் குட்டீஸ்கள் மட்டுமல்லாது, காமெடி திறமையால் அனைவரையும் சபாஷ் சொல்லவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் இமான் அண்ணாச்சி. சிகப்பான தோற்றத்தில் வெளுத்துக்கட்டும் பல தொகுப்பாளர்கள் மத்தியில், கருப்பான தோற்றத்திலும் காமெடியால் வெற்றிபெற்று நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறேன் என்று மனம் திறந்தார். தேனி வந்த அவர் 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி

* உங்களின் முதல் சினிமா அனுபவம்..


சினிமாவில் ஏராளமான சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். பின்னர் சுந்தர்.சி நடித்த


தலைநகரம் படத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'டிவி'யில் தொகுப்பாளராக இருந்ததால் முதல் அனுபவம் பற்றிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை.


* நெல்லை பேச்சு வழக்கு தான் உங்களின் சிறப்பா?


இல்லை. என்னால் மதுரை, கோவை, சென்னை பேச்சு வழக்கும் நன்றாக வரும். நெல்லை தமிழால் என் காமெடி பிரபலமடைந்ததால், மக்கள் அதையே விரும்புவதாக நினைக்கிறேன்.




* உங்களின் காமெடியில் அடுத்ததாக வரவிருக்கும் படங்கள்...


இதுவரை ஒன்பது படங்கள் நடித்து முடித்துள்ளேன். குறிப்பாக அதில் சாமி-2 முக்கியமானது.


விரைவில் படங்கள் வெளிவர உள்ளன.


* கதாநாயகனாக நடிக்கிறீர்களாமே...


நல்ல நேரம் வந்துடுச்சு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். இதில் 3 கதாநாயகிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் எனக்கு ஜோடி இல்லை என்பது வருத்தமான(!) செய்தி. குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.




* சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்...


இணைந்த கைகள் என்ற அமைப்பு மூலமாக ரோட்டோரங்களில் இருக்கும் ஏழை எளியோருக்கு


உதவிகள் செய்து வருகிறேன். தற்போது இதில் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். ஏழைகளுக்கு சிறுதொழில் துவங்க, தள்ளுவண்டி, தையல் மிஷின் உள்ளிட்டவைகளை செய்து கொடுக்கிறோம்.


* அவர்களுக்கு உதவும்எண்ணம் உருவானது எப்படி...


சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க 18 ஆண்டு போராடி உள்ளேன். அப்போது சாப்பாட்டிற்கு வழி ஏற்படுத்தி கொள்ள ஒரு டிரைசைக்கிள் வாங்க முடியாமல் சிரமப்பட்டேன். அதுபோன்று பலரும் சிறுதொழில் செய்து குடும்பத்தை நடத்த போராடி கொண்டிருப்பார்களே என்று யோசித்தேன். அதில் பிறந்தது தான் இணைந்த கைகள் அமைப்பு.


* எந்த முன்னணி நடிகருடன் நடிக்க ஆசை...


ரஜினி, கமல், அஜித் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அஜித்தின் அடுத்த


படமான விசுவாசத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.




* திரைத்துறையில் நாகேஷ் போன்ற காமெடி ஜாம்பவான்களின் இடம் தற்போது காலியாக உள்ளதே...


அவர்களின் இடம் அவர்களுக்கானது மட்டுமே. எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்குவேன்.


முன்னணி காமெடி நடிகராக வருவதே லட்சியம்.


தொடர்புக்கு : imanannachi@gmail.com


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in