தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை லஞ்சம் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இது தொடர்பாக இந்து அமைப்பு சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவித்தது. இந்நிலையில், பிற மதத்தினரின் உணர்வுகளை, உள்நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது ஐபிசி 295 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.