ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் திலீப்பின் பெர்சனல் வாழ்க்கையில் கடந்த ஒரு வருட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் சாதாரண ஜனங்கள் வரை பிரசித்தமானது தான். ஆனால் அவையெல்லாம் அவரது சினிமா பயணத்தில் தடைக்கல்லாக மாறியதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த வருடம் திலீப் நடிப்பில் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' மற்றும் 'ராம்லீலா' என இரண்டு படங்கள் வெளியாகின. நடிகை விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் மீது சந்தேகம் இருந்துவந்த நிலையில் கடந்த ஏப்ரலில் வெளியான 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' திரைப்படம் சுமாரான கதை, திரைக்கதை அமைப்பால் தானாகவே பெட்டிக்குள் சென்று அடங்கியது.
அதன்பின் நடிகை விவகாரத்தில் கைது, பலமுறை முன்ஜாமீன் மறுப்பு என அவரது கஷ்டமான நேரத்தில் ஓடுமோ ஓடாதோ, மக்கள் இந்தப்படத்தை புறக்கணிப்பார்களோ என்கிற பயத்துடனேயே திலீப்பின் 'ராம்லீலா' படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
ஆனால் திலீப் செய்த புண்ணியமோ என்னவோ, ரசிகர்கள் திலீப்பின் பெர்சனல் வாழ்க்கையையும் சினிமாவையும் ஒன்றாக சேர்த்து பார்க்கவிரும்பவில்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது. ஆம்.. ராம்லீலா மிகப்பெரிய வெற்றி பெற்று, இந்த வருடம் மலையாள சினிமாவில் வசூல் ரீதியான ஹிட்படம் என்கிற முதலிடத்தையும் கைப்பற்றியது. அதுமட்டுமல்ல திலீப்பின் சினிமா பயணத்தில் முதன்முறையாக 5௦ கோடி ரூபாய் வசூல் என்கிற இலக்கையும் தொட வைத்தது.
ஆக திலீப் சொந்த வாழ்க்கையில் சறுக்கல்களை சந்தித்தாலும் சினிமா பயணத்தில் அவருக்கு வெற்றி என்றே சொல்லவேண்டும்.